LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, January 11, 2019

கிழக்கு ஆளுனா் நியமனத்திற்க்கு எதிராக ஆா்ப்பாட்டம்

                                                                       (பாண்டி)
கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்குடா பிரதேச மக்களினால் இன்று வெள்ளிக்கிழமை வாழைச்சேனை, கிண்ணையடி சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை இச்சபவத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்டத்தில்  கிழக்கு மக்கள் ஒன்றியத்தினால் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிந்தது.

வாழைச்சேனை பிராதான வீதி  கிண்ணையடி சந்தியில் இன்று காலை கூடிய பிரதேச மக்கள் பதாதைகளை கையில் ஏந்தியவாறும் கோஷசங்களை எழுப்பி இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்கு மாகாணம் தமிழரின் கையில் இருந்து பறி போகின்றது,;இனவாதிக்கு ஆளுனர் போர்வையா. ஒன்றினைவோம் இனவாதத்தை தடுப்போம். வேண்டாம் வேண்டாம் இனவாதி வேண்டாம்,தமிழர்களை மீண்டும் மீண்டும் ஒடுக்காதே ,தமிழர்களின் கோரிக்கையை கவனத்தல் எடு ,என்பன போன்ற வாசகங்களை எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு இவ் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 அத்துடன் தமக்கு பொருத்ததமான கிழக்கு மாகான ஆளுநரை நியமிக்குமாறும் இதன்போது தெரிவித்தனர்.

இன்று இடம்பெற்ற ஹர்த்தாலினை முன்னிட்டு தமிழ் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைவாக காணப்பட்டது. வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு காணப்படுறது. அரச திணைக்களங்கள் திறக்கபட்ட போதிலும் பொதுமக்களின் வரவு குறைவாக காணப்பட்டது.குறைந்த எண்ணிக்கையிலான போக்குவரத்து சேவை இடம்பெற்றது.

 முஸ்லிம் பிரதேசங்களான கோறளை மேற்க்கு ஓட்டமாவடி,கோறளை மத்தி, ஏறாவூர் போன்ற பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் வழமைக்கு மாறாக திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் இடம்பெறுவதுடன் பாடசாலைகள் மற்றும் அரச தினைக்களங்கள் வழமை போன்று இயங்குகின்றன.














 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7