சீனாவின் தேசிய கீதத்தை அவமதிக்கும் நபருக்கு மூன்றாண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் சர்ச்சைக்குரிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.ஹாங் கொங் அரசாங்கத்தினால் இன்று(புதன்கிழமை) இந்த சர்ச்சைக்குரிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
சீனா மீது தேசப்பற்றை மேலோங்கச் செய்யும் வகையிலேயே இந்த சர்ச்சைக்குரிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
சிறைத்தண்டனையைத் தவிர தேசிய கீதத்தை அவமதிக்கும் நபருக்கு அதிகபட்ச அபராதமாகச் சுமார் 6300 டொலர்கள் விதிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.





