நிதியமைச்சர் கரோல் ஜேம்ஸின் தொகுதி அலுவலகத்திலிருந்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எவ்வித குற்றச்சாட்டுகளுமின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.நிதியமைச்சர் கரோல் ஜேம்ஸின் தொகுதி அலுவலகத்திலிருந்த ஒருவரை விக்டோரியா பொலிஸார் கைதுசெய்தனர்.
தவறான நடத்தை மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டின் கீழ் இவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைதுசெய்யப்பட்டார்.
சந்தேகநபர் கைது செய்யப்படுவதற்கு முன்பாக அமைச்சரின் அலுவலகத்தில் பொலிஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேகநபர் மீது எவ்வித குற்றச்சாட்டுகளும் பதிவுசெய்யப்படாது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.





