கனடாவின் லண்டன் பகுதியில் கடும் குளிருடனான காலநிலை நிலவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சுற்றுசூழல் கனடா அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாலை அல்லது இரவு வேளையில் உறைபனி மழையுடன் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
குறித்த காலநிலை காரணமாக லண்டனிலுள்ள வீதிகள் மிகவும் அபாயகரமாக இருக்கும் என வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பிரிட்டிஷ் கொலம்பியாவின் பல பகுதிகளில் கடுமையான காற்று வீசுமென எதிர்வு கூறப்பட்டுள்ளதோடு, புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் கனடா அமைப்பு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. அத்துடன், விக்ரோரியா நகர்ப்பகுதியில் மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.





