திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் பூண்டி கலைவாணன் போட்டியிடுவார் என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அறிவித்துள்ளார்.தி.மு.க. வேட்பாளருக்கான நேர்காணல் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்றது. நேர்காணலின் முடிவில் திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த அறிவிப்பை, அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்து இதனை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் மறைவையடுத்து, வெற்றிடமாக இருக்கும் திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஜனவரி 28-ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கடந்த 31-ஆம் திகதி அறிவித்தது.
இதற்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. மனுதாக்கல் செய்ய 10 ஆம் திகதி இறுதி நாளாகும். இதில், நாம் தமிழர் சார்பில் சாகுல் அமீது போட்டியிடுவார் என்று முதல் கட்சியாக வேட்பாளர் பெயரை அறிவித்தது.
இதைத்தொடர்ந்து, அ.ம.மு.க. சார்பில் எஸ்.காமராஜ் போட்டியிடுவார் என்று டி.டி.வி. தினகரன் இன்று அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





