LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, January 13, 2019

வவுனியாவில் டெங்கு தாக்கத்தால் 596 பேர் பாதிப்பு! இருவர் உயிரிழப்பு!

வவுனியா மாவட்டத்தில் கடந்த வருடம் 596 டெங்கு நோயாளர்கள் இனங்காணபட்டுள்ளதாக வவுனியா பிராந்திய தொற்றுநோய் தடுப்புப்
பிரிவின் வைத்திய அதிகாரி யூட்பீரிஸ் தெரிவித்தார்.

அத்துடன் டெங்கு நோயால் இருவர் உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

வவுனியாவில் கடந்தவருடம் டெங்குநோயின் தாக்கம் தொடர்பாக இன்று (சனிக்கிழமை) வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த அவர், “வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகபட்சமாக 405 நோயாளர்களும், செட்டிக்குளம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 107 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

மேலும், வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 36 நோயாளர்களும், வவுனியா தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 48 நோயாளர்களும் இனங்காணப்பட்டனர்.

வவுனியாவில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் உள்ள பொதுமக்களின் கிணறுகளில் டெங்கு கொசுவை அழிக்கும் மீன்கள் விடப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7