இலங்கையின் முதல் பாடசாலையென்ற பெருமையினைக்கொண்டுள்ள மட்டக்களப்பு
மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல்
நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின்
தலைவர் வி .தர்சன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மெதடிஸ்த
மத்திய கல்லூரியின் பழைய மாணவனும் ,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருமான எம்
.உதயகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக கல்லூரியின் அதிபரும் பழைய மாணவர் சங்க ஆலோசகருமான ஆர்
பாஸ்கரன் உட்பட கல்லூரியின் பிரதி அதிபர், பழைய
மாணவர்கள் விசேடமாக சிரேஸ்ட பழைய மாணவர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கல்லூரி பழைய மாணவர்களின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வில் கல்லூரியின் முன்னால்
அதிபரும் ,முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான பிரின்ஸ் காசிநாதரின் மறைவுக்கு
அஞ்சலி செலுத்தப்பட்டு அவருடைய கல்லூரி செயல்பாடு தொடர்பான காணொளி காட்சிப்படுத்தப்பட்டது
இதேவேளை கல்லூரியின் அபிவிருத்தி நடவடிக்கையில்
செயல்பட்ட பழைய மாணவர்களின் செயல்பாடுகள் தொடர்பான காணொளிகள் காட்சிப்படுத்தப்
பட்டதுடன் , அந்த செயல்பாட்டில் ஈடுபட்ட பழைய மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி
கௌரவிக்கப்பட்டன