மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் எ நவேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க
அதிபர் எம் .உதயாகுமார் கலந்துகொண்டு பரிசில்களை வழங்கி வைத்தார்
அங்கவீனமுற்ற நபர்களை
வலுவூட்டுதல், உள்வாங்குதல் மற்றும் சமத்துவத்தினை
உறுதிப்படுத்துதல் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின
நிகழ்வில் பாடசாலைகளில் நடாத்தப்பட்ட
போட்டிகளில் தமது திறமைகளைக் காண்பித்து வெற்றி ஈட்டியவர்களுக்கும் , தரம் ஐந்து புலமைப்பரிசில்
பரீட்சையில் திறமையை வெளிப்படுத்தியவருக்கும் ,2017ம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில்
திறமையை வெளிப்படுத்திய மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்
இதேவேளை 2016. 2017ம் ஆண்டுகளில் பல்கலைக்கழக அனுமதியைப்
பெற்றுள்ளவர்களுக்கு மாவட்ட சமூக சேவைகள் பிரிவினால்
தெரிவு செய்யப்பட்டு 25000 ரூபா பெறுமதியான பணப்பரிசில்களும் மாற்றுத்திறனாளிகளுக்கான நடாத்தப்பட்ட தேசிய
தடகள விளையாட்டு விழாவில் தேசிய ரீதியில் வெற்றிபெற்ற வீர வீராங்கனைகளுக்கு தலா
5000 ரூபா பெறுமதியான பணபரிசுகளும் , சுயசக்தி அபிமானி
நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்திற்கு ரூபா 5000
பெறுமதியான பணபரிசுகள் வழங்கப்பட்டது
இதேவேளை சித்துறு
கலைநிகழ்வில் பங்குபற்றிய குழு, பிரதேச மட்டத்தில் தங்களது திறமைகளை வெளிக்காட்டிய
சுய உதவிக் குழுக்களின் அங்கத்தவர்களும் இன்று நடைபெற்ற சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வில்
மட்டக்களபபு மாட்ட சமூக சேவைகள் பிரிவினால் கௌரவிக்கப்பட்டனர் .
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட
மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளின் நிறுவன பிரதி நிதிகள் , ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பெற்றோர் என பலர் கலந்துகொண்டனர்