
இல் சிறந்த நிலைக்கு நாம் கொண்டு செல்ல முயற்சிக்கவேண்டும் என திருகோணமலை மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.வேல்வேந்தன் தெரிவித்தார்.
நேற்று காலை10.00மணியளவில் திருகோணமலை மாவட்ட கூட்டுறவு சபையில் அதன்தலைவர் க.சதானந்தம் அவர்களின்வரவேற்புரையுடன் நடந்த நல்லாட்சி தொடர்பான செயலமர்வில் அவர் கருத்துவெளியட்டார்.இங்கு மேலும் இவ்வாறு கருத்துதெரிவித்தார்


பல இடங்களில் இவ்வாறான சங்கங்கள் பல தொழில் திட்டங்களை முன்னெடுக்கின்றன.
பல இடங்களில் சங்கங்கள் இயக்கமின்றி முடங்கியும் உள்ளன. இவ்வாறு இயங்காத சங்கங்களையும் நாம் இயங்;கவைக்க வேண்டும்.
இவை இயங்குவதாக விருந்தால் சங்கங்களிற்கிடையில் நல்லாட்சி சூழல் நிலவவேண்டும்.
கடந்த 3 வருடங்களாக நல்லாட்சி நாட்டில் நிலவியதாக சொல்லப்பட்டது. ஆனால் இந்த நல்லாட்சியை தரக்கூடிய சிறந்த அமைப்பாக கூட்டுறவுச்சங்கங்கள் திகழ்கின்றன. இதனை நாம் நல்லமுறையில் பயன்படுத்தவேண்டும் எனவும் ஆணையாளர் வலியுறுத்தினார்.
இங்குபேசிய தலமைக்கூட்டுறவு அபிவிருத்தி அதிகாரி நசீர் குறிப்பிடுகையில் , சங்கம் முறையாக கூட்டங்களை நடாத்துதல் வேண்டும். அதன்மூலம் தீர்மானங்களையும் தகவல்களையும் அடிக்கடி பகிர்ந்து கொள்ளவேண்டும் அதன்மூலம் நல்லாட்சியின் முக்கிய விடயமான வெளிப்படைத்தன்மையை பேணமுடியும். பரஸ்பரம் நிருவாகிகள் தமது சங்கத்தின் சகல நடவடிக்கைளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இந்நகிழ்வில் மாவட்ட கூட்டுறவுச்சபையில் அங்கம் வகிக்கும் கூட்டுறவு அமைப்பு நிருவாகிகள் கலந்துகொண்டனர்
அ . அச்சுதன்
