மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட சேனைக்குடியிருப்பு
, அம்மன் புரம் , ஏறாவூர்
ஐந்தாம் குறிச்சி ஆகிய கிராம
சேவை பிரிவுகளில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இன்று (29 ) வியாழக்கிழமை
ஆரம்பித்து வைக்கப்பட்டன
தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் அமைச்சின் ஊடாக ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட கிராம சேவை
பிரிவின் சேனைக்குடியிருப்பு பொது மயானத்துக்கான சுற்று மதில் அமைத்தல் , அம்மன்
புரம் வீதியினை கொங்கிரீட் வீதியாக புனரமைத்தல் மற்றும் ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய வளாக அருகில் செல்லும் பிரதான வெள்ளவாய்காலினை
இரண்டாம் கட்டமாக அமைத்தல் தொடர்பான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
பிரதி அமைச்சர்
வியாலேந்திரன் பணிப்புரைக்கு அமைவாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் அமைச்சின் ஊடாக 10 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த
அபிவிருத்தி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது
இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் பிரதி அமைச்சர் வியாலேந்திரன், ஏறாவூர்
பற்று செங்கலடி பிரதேச சபை உறுப்பினர்கள் கிராம அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய நிர்வாக உறுப்பினர்கள்
, சேனைக்குடியிருப்பு அம்மன் புரம், பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள் உட்பட
பலர் கலந்துகொண்டனர்
