கிழக்கு மாகாண சுதேச வைத்தியத் துறை திணைக்களத்தினால் பாரம்பரிய வைத்தியர்களுக்கு சான்றிதழ்களும் உபகரணங்களும் வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகமவினால் இன்று (27) செவ்வாய்க் கிழமை திருகோணமலையில் உள்ள மாகாண முதலமைச்சின் செயலக கேட்போர் கூடத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 25 மர்த்தனர் பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்களும்,56 பாரம்பரிய வைத்தியர்களுக்கான உபகரணங்களும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.
இவ் நிகழ்வில் மாகாண சுதேச வைத்திய அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்ஸார், மாகாண பிரதம செயலாளர் டி.எம்.அபயகுணவர்தன, மாகாண சுதேச வைத்திய துறை பணிப்பாளர் டாக்டர் ஆர்.ஸ்ரீதர் உட்பட பலர் பங்கேற்றனர்.
(அ . அச்சுதன்)