வாகரை பிரதேச சபையின் தவிசாளர் சி.கோணலிங்கம் கவனத்திற்கு வட்டாரங்களை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்களால் கொண்டு வரப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்ட வீதிகளை சீரமைக்கும் பணிகள் வாகரை சபையால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் போது முழுமையாக போக்குவரத்து தடை ஏற்பட்ட கதிரவெளி தொடக்கம் கட்டுமுறிவு வரையான பிரதான வீதி மற்றும் ஊரியன்கட்டில் இருந்து தட்டுமுனைக்கு செல்லும் அழகாபுரி வீதி ஆகியன மேற்படி வேலைத்திட்டதில் சீரமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.