இவ் மாணவன் கலாசார அலுவல்கள் திணைக்களமும் திருகோணமலை மாவட்ட செயலகமும் இணைந்து நடத்திய மாவட்ட இலக்கியப் போட்டியில் சிறுவர் பிரிவில் கவிதை பாடல் போட்டியிலும் முதலாம் இடத்தினைப் பெற்றவர், மேலும் திருகோணமலை பொது நூலகத்தில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு திருகோணமலை பாடசாலை மாணவர்களுக்கு இடையில் நடைபெற்ற இசையும் அசைவும் கவிதை பாடல் போட்டியிலும் இவ் வருடம் முதலாம் இடத்தினைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
25- 11- 2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சாகித்திய விழாவில் கவிதை பாடல் போட்டியில் முதலாம் இடத்தினைப் பெற்றமைக்காக பட்டினமும் சூழலும் பிரதேச கலாசார அதிகார சபையின் உப தலைவர் கலாபூஷணம் கனக மகேந்திராவினால் இவ் மாணவன் கெளரவிக்கப் படுவதையும் படத்தில் காணலாம்.
(அ . அச்சுதன்)
