
பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக முன்னால் உபவேந்தர் அருட்தந்தை கலாநிதி ஜீ.எப்.ராஜேந்திரம் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் சித்த மருத்துவ பீடத்தின் பகுதித் தலைவர் திருமதி. பகிரதன் விஜிதா நீரிழிவு தொடர்பிலான விளக்கவுரைகளை வழங்கி வைத்தார்.
யோகாசன பயிற்சிகள் ,நீரிழிவு கட்டுப்பாடு தொடர்பிலான உணவுப் பழக்க வழக்கங்கள்தொடர்பிலான முறைகளையும் விளக்கவூரையூடாக பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டப்பட்டது.
பாடசாலை மாணவர்கள், பொது மக்கள் மற்றும் பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்ததுடன் விசேடமாக இலவச நீரிழிவு பரிசோதனைகளையும் பலர் செய்து கொண்டனர்.
(அச்சுதன்)
