ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சவை நியமித்த பின்னர் தொடர்ச்சியாக அரசியல் சர்ச்சை நிலவி வருகின்றது.
பாராளுமன்றம் கூட்டப்பட்டு மகிந்த ராஜபக்ச தனக்குரிய பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் தேவை உள்ள நிலையில் மீண்டும் ஒரு பரபரப்பு எழுந்துள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி. ஆகிய கட்சிகளை இணைத்து ஐக்கிய தேசிய கட்சி இடைக்கால அரசு ஒன்றை அமைக்கும் திட்டம் பற்றி ஆராயப்பட்டு வருவதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.
ஏற்கனவே ஜே.வி.பி தாம் யாருக்கும் ஆதரவு தெரிவிக்க போவதில்லை என தெரிவித்துள்ள நிலையில் , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள மகிந்த அதிருப்தி உறுப்பினர்களை வளைத்து போடும் முயற்சிகளும் நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த புதிய இரகசிய முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் பின்னணியில் ஈடுபட்டுள்ளதவும் தெரிய வருகின்றது.
இந்த முயற்சி வெற்றியளிக்கும் நிலையில் மகிந்தவின் புதிய அரசுக்கு பெரும் பின்னடைவு உருவாகும் என இராஜதந்திர வட்டாரங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன.