LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, October 6, 2020

UPDATE நாட்டில் 3,478 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,478 ஆக அதிகரித்துள்ளது.
இன்றுமட்டும் 76 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் ஒருவர் குணமடைந்துள்ளனர்.
அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 259 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் தொற்று உறுதியானவர்களில் 206 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்தோடு கொரோனா தொற்று சந்தேகத்தில் 56 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மொனராகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு மினுவங்கொட ஆடை தொழிற்சாலையின் 41 வயதுடைய பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் 39 வயதுடைய குடும்பப் பெண் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை நேற்றுமுன்தினம் உறுதி செய்யப்பட்டது.
இதனை அடுத்து தற்போதுவரை 73 பேர் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் கொரோனவினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மினுவங்கொட மற்றும் இரணவில வைத்தியசாலைகள் பயன்படுத்தப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7