LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, May 17, 2020

ஊரடங்கு குறித்த அறிவிப்பு!

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறுஅறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை, ஏனைய மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) இரவு 8 மணிமுதல் நாளை மறுதினம் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாளை ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதிலும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த போதும் இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதார செயற்பாடுகளை வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்காக கடந்த 11ஆம் திகதி திங்கள் ஆரம்பிக்கப்பட்ட நடைமுறைத் திட்டம் இன்று சனிக்கிழமை 8 வரை தொடர்ச்சியாக செயற்படுத்தப்பட்டு பின்னர் 18 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் முன்னெடுக்கப்படும்.
முன்னர், வெளியிடப்பட்ட அறிவித்தல்களில் குறிப்பிடப்பட்ட அதனுடன் தொடர்புடைய நிபந்தனைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை எனவும் அரசாங்கம் மேலும் அறிவித்துள்ளது.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7