LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, May 29, 2020

சுழற்சி அடிப்படையில் பாடசாலைகளை நடத்த மத்திய அரசு தீர்மானம்!

சுழற்சி அடிப்படையில் பாடசாலைகளை நடத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக இந்தியாவில் ஒரு கல்வியாண்டில் பள்ளிகளில் 220 வேலைநாட்கள் நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும். அதாவது ஒரு மாணவர் 1320 மணி நேரம் வகுப்பறை பாடங்களை கற்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக வரும் கல்வியாண்டில் இதை அமுல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக  பள்ளி கல்லூரிகளை ஒருநாள் விட்டு ஒருநாள் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதாவது 100 நாட்களில் 600 மணி நேரம் கல்வி கற்றால் போதும் என்ற விதியை ஏற்படுத்த திட்டமிட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்மூலம் சுழற்சி அடிப்படையில் பள்ளிகளை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7