LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, April 23, 2020

புதுச்சேரி அரசியல் தலைவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் – காலில் விழுந்த அமைச்சர்

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை இன்று காலை சட்டப்பேரவையில் மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா நெருக்கடியான காலப்பகுதியில், மக்களிடம் குறைகளை தீர்க்க செல்வதாலும் அரிசி மற்றும் காய்கறி உள்ளிட்ட நிவாரணங்களை வழங்கும் பணிகளில் ஈடுபடுவதாலும் புதுச்சேரியில் மக்கள் பிரதிநிதிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய காலை 9 மணி முதல் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆர்டி- பிசிஆர் ( RT-PCR) முறையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதுடன், முதலில் முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்எல்ஏக்களில் காங்கிரஸில் ஜெயமூர்த்தி, அனந்தராமன், அதிமுகவில் அன்பழகன், பாஸ்கர், பாஜகவில் சாமிநாதன், சங்கர் ஆகியோர் பரிசோதனை செய்திருந்தனர்.

பரிசோதனைக்கு வந்த அரியாங்குப்பம் தொகுதியின் காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயமூர்த்தி பரிசோதனை செய்த மருத்துவர்களின் காலில் விழுந்து வணங்கி சேவையை பாராட்டினார்.

இந்நிலையில், குறித்த சோதனை முடிவுகள் நாளை வெளியாகும் என்று சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் தெரிவித்தார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7