LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, April 10, 2020

யாழில் இன்றைய கொரோனா பரிசோதனை முடிவு: மன்னாரைச் சேர்ந்தவர்களுக்கு தொற்று இல்லை!

யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று (வெள்ளிக்கிழமை) 10 பேருக்கு கொரோனா தொற்றுக்கான ஆய்வுகூடப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இருவர் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். அதில் ஒருவர் நேற்று மாலை மன்னாரிலிருந்து போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டவர் என்பதுடன் குறித்த நபர் கடந்த மாதம் இந்தியாவிலிருந்து வந்திருந்தவர் என பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வைரஸ் தொற்றுடையவர்களோடு தொடர்புடைய மன்னார் பகுதியைச் சேர்ந்த எட்டுப் பேருக்கும் கொரோனா தொற்று குறித்த ஆய்வுகூடப் பரிசோதனை இடம்பெற்றதாக அவர் கூறியுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7