![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-iLvvGwju3-1Ks1ZZt8EKsVHsM9kLFVPBCPZEHOeUxC8EQ5LTHiwWVkdhT1Xe_CNpyXjWhyphenhyphen_GllfXPGwyWm578S837Z2a7nxv-ibBAYvyR9WS-wcwoxPTX4Wm-S5CWpg1Gddgi4UbdoA/s320/thattungal.com.jpg)
ஆந்திராவில் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவ வசதிகளையும் அதிகப்படுத்த அறிவுறுத்திய நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் 13 மாவட்டங்களில் தெரிவுசெய்யப்பட்டுள்ள 58 தனியார் மருத்துவமனைகளில் 19 ஆயிரத்து 114 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அவற்றுள் ஆயிரத்து 286 அவசர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளும், தனிமைப்படுத்தத் தேவையான 717 படுக்கைகளும், 17 ஆயிரத்து 111 சாதாரண படுக்கைகளும் அடங்குகின்றன. அதுமட்டுமின்றி கூடுதலாக மேலும் 530 படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)