LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, April 20, 2020

கொரோனா வைரஸ் தாக்கம்: 19-04-2020 மாவட்ட ரீதியான விபரம்..!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கொழும்பில் மட்டும் இதுவரை 61 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது நேற்றைய தினம் 55 ஆக இருந்தது என சுகாதார அமைச்சு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை 254 பேர் (நேற்று மட்டும் 10 பேர்) அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 91 பேர் இதுவரை குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அந்தவகையில் தற்போது கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட ரீதியான தகவல்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி கொழும்பில் 61 பேர், களுத்துறை 45, புத்தளம் 35, கம்பஹா 31, யாழ்ப்பாணம் 16, கண்டி, 07, இரத்தினபுரியில் 5 பேரும் கேகாலையில் 03 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை குருநாகல், மாத்தறை மற்றும் கல்முனையில் தலா 02 பேரும் காலி, மட்டக்களப்பு, பதுளை மற்றும் வவுனியாவில் தலா ஒருவரும் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களை தனிமைப்படுத்திய மையங்களில் 38 பேரும் இலங்கை திரும்பியிருந்த 03 வெளிநாட்டு பிரஜைகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7