![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7l7aeWAckCgW5ZkFVlEy157b6Y1Ba0eb2z5hUSTMIXrPFXtSOP5pNpXk3HCsddn5uml64UKVddarse49SSxvsr97G7MyFFIZCy35IOOdTgnYmQHZQFfnnznpNK7MeXf_S6qoMjBx3edU/s320/thattungal.com.jpg)
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை ஆர்.ஏ.புரம் மற்றும் வேளச்சேரியில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள சமுதாய நலக் கூடத்தை நேரில் சென்று ஆராய்ந்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிடார்.
அப்போது அவர் கூறுகையில், “வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்து தங்கியுள்ள தொழிலாளர்களுக்கு தங்குமிடம், உணவு, உடை உள்ளிட்ட பல்வேறு உதவிகளை அரசு செய்துள்ளது. 1.34 இலட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தங்கி வேலை செய்கின்றனர்.
மக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவே ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவின் தாக்கத்தைப் பற்றித் தெரியாமல் மக்கள் வெளியே சுற்றுகின்றனர். கொரோனா பரவாமல் தடுக்க மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்புத் தரவேண்டும்.
மக்களைத் துன்புறுத்த 144 தடை உத்தரவு போடப்படவில்லை. மக்களின் பாதுகாப்புக்காகவே போடப்பட்டது. மக்கள் வெளியே சுற்றுவது அதிகரித்தால் 144 தடை உத்தரவைக் கடுமையாக்க நேரிடும். அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கை மீறினால் சட்டம் தன் கடமையை செய்யும்.
இந்த மாதம் இறுதி வரை இலவச ரேசன் பொருள்கள் வழங்கப்படும். மேலும் டோக்கன் வழங்கப்படும் போதே நிவாரணத் தொகையான ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மேலும், தமிழக அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)