LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, March 1, 2020

டெல்லியில் தற்போது அமைதி நிலவுவதாக தகவல்!

கலவரம் பாதித்த டெல்லியில் தற்போது அமைதி நிலவுவதாக இந்தியச்
செய்திகள் தெரிவித்துள்ளன. எனினும், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வட கிழக்கி டெல்லியின் கலவர இடங்களில் அமைதி நிலவி, இயல்பு வாழ்க்கை திரும்பி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்கு போக்குவரத்து சீரடைந்துள்ளதுடன், சில இடங்களில் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

வகுப்பு மோதலை வளர்க்கும் நோக்கில் சில தீய சக்திகள் பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம் என உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளதோடு, கலவரம் வெடித்த பகுதிகளில் வசித்த மக்களில் பலர் வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டதால் அங்கு மயான அமைதி நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது டெல்லியின் நிலைமை கட்டுக்குள் வந்தாலும், பொலிஸார், துணை இராணுவத்தினர் மற்றும் அதிரடிப் படை வீரர்கள் முக்கிய சந்திப்புகளில் குவிக்கப்பட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக இதுவரை 330 அமைதிக் கூட்டங்கள் அங்கு நடத்தப்பட்டுள்ளன.  அதேநேரம், இந்த கலவரத்திற்கு காரணமானவர்களிடம் இருந்து நஷ்ட ஈடு வசூலிக்கவும் டெல்லி பொலிஸார் முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கடந்த ஞாயிறு முதல் வியாழன் வரை நடந்த கலவரங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சூறையாடப்பட்டன.
இதற்கு காரணமானவர்கள் என ஆயிரம் பேரை டெல்லி பொலிஸ் தற்போது அடையாளம் கண்டுள்ளது.

இவர்களில் 600 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதோடு, எஞ்சியவர்களை உடனடியாக கைது செய்யுமாறு குற்றப்பிரிவின் சிறப்பு புலனாய்வு குழுவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7