LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, March 7, 2020

யாழ். மாநகர முதல்வருக்கும் இத்தாலி தூதுவருக்கும் இடையில் விசேட சந்திப்பு!

யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட்டுக்கும்
இலங்கைக்கான இத்தாலியின் தூதுவர் ரிற்றா ஜி.மனெல்லா ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். மாநகர முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் தூதுவர், யுத்தத்தின் பின்னரான வடக்கு கிழக்கு மக்களின் நிலைமைகள் தொடர்பாக மாநகர முதல்வரிடம் கேட்டறிந்துகொண்டார்.

இதன்போது, ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தமிழ் பேசும் மக்களின் ஒருமித்த கருத்துப் போக்கையும் இலங்கையில் சிறுபான்மை மக்கள் எதிர்பார்க்கின்ற அதிகாரப் பகிர்வு நிலைப்பாடுகளையும் எடுத்துக் காட்டியுள்ளது என முதல்வர் தூதுவரிடம் விளக்கியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்து வருகின்றது என்பதையும், மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கே தொடர்ச்சியாக தமது ஆணையை வழங்கி வருகின்றார்கள் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் நிச்சயமாக இத்தீர்மானத்திலேயேதான் இருக்கின்றார்கள் என்றும், எதிர்காலத்தில் இந்த ஆதரவு இன்னும் அதிகரிக்கும் என்றும், தமிழ் மக்களின் ஒற்றுமையையும், நாடாளுமன்றில் உள்ள பலத்தைச் சிதைக்க புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ் உதிரிக் கட்சிகளின் போக்குகள் குறித்து மக்கள் மிகுந்த தெளிவுடனேயே இருக்கின்றார்கள் என்பதையும் முதல்வர் தூதுவரிடம் குறிப்பிட்டுள்ளார்.

சந்திப்பின் இறுதியில் இத்தாலியில் ஏற்பட்டிருக்கின்ற கொரோனா தாக்கத்தின் விபரீதங்கள் குறித்தும், அதனால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் தனது நாட்டு மக்களின் நிலைகுறித்த தனது கவலைகளை முதல்வருடன் தூதுவர் பகிர்ந்து கொண்டார்.

இந்த சந்திப்பில் மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன் மற்றும் மாநகர செயலாளர் அ.சீராளன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7