LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, February 29, 2020

வெளிநாடுகளில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி!

கொரோனா  வைரஸ் அச்சம் காரணமாக  இந்தியாவுக்குத் திரும்ப
முடியாமல்  ஈரான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக மீட்டு இந்தியா திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீனா மற்றும் கொரியாவைத் தொடர்ந்து ஈரானிலும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில்  பெரும்பாலான வளைகுடா நாடுகளில் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில்  ஈரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தீவுகளில் பணியாற்றிக்கொண்டிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 300 மீனவர்கள் உட்பட 450 இந்திய மீனவர்களை மீட்க வேண்டும்  எடப்பாடி பழனிசாமி இன்று (வெள்ளிக்கிழமை) கடிதம் எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ள அவர், “விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால்  இந்திய மீனவர்கள்  ஈரானைச் சுற்றியுள்ள துறைமுகங்களில் தத்தளிப்பதாகவும் தங்களை உடனடியாக மீட்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

 ஈரானிலுள்ள இந்திய தூதரகம் அந்த மீனவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுத்து  அவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7