![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqm2XKoTAkudzDT3gPn29JReIWQbp2pYzQ1_aua529OKE2zkgyqaMom7F-yEi-oxkv3rc-b0Egwhiwq2WHxjbGqymTeUzFDtvpbf0bT-ffv0r8F7mrTf5vDTFx3NwQnIQhGa9Sw5Tp6Nk/s320/Thattunkal.com.jpg)
தேர்வுகள் இரத்துச் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தின் கீழ் செயற்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், இந்த ஆண்டு 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்தது.
இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமையும் என்று கல்வியாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வந்தது.
கடந்த 2019ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த ஆணையை திரும்பப் பெறப்போவதில்லை எனவும் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் உறுதியாக நடத்தப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் தெரிவித்திருந்தார்.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். பெற்றோர்கள், ஆசிரியர்கள் தரப்பிலும் எதிர்ப்புகள் வலுத்தன. இந்நிலையில், பொதுத் தேர்வுகள் அறிவிப்பை இரச்துச்செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு வெளியிட்ட அரசாணை இரத்துச் செய்யப்படுகிறது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)