LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, January 14, 2020

ராஜித சேனாரத்னவிற்கு அழைப்பாணை – கொழும்பு மேல் நீதிமன்றம்!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை
எதிர்வரும் 17 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பாக நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கமைய கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு பிரதம நீதிவானினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த பிணை உத்தரவில் குறைபாடு உள்ளதாகவும் எனவே அதனை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி, சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மீள் திருத்த விண்ணப்பம் எதிர்வரும் 17 ஆம் திகதி எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, குறித்த மனுவின் எதிர்மனுதாரர்களுள் ஒருவரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை குறித்த தினத்தில் நீதிமன்றில் ஆஜராகும் அழைப்பாணை விடுக்குமாறு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலக்கரத்ன உத்தரவிட்டுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7