LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, January 1, 2020

வருடத்தின் முதல் நாளில் உயிரைப் பறிகொடுத்த இரு இளைஞர்கள்!

கிளிநொச்சி கனகபுரம் வீதியில் இடம்பெற்ற
வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (புதன்கிழமை) அதிகாலை 4.00மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தம்புள்ளையிலிருந்து மரக்கறிகளை விநியோகித்துவிட்டு திரும்பி வந்த பாரஊர்தி எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

கிளிநொச்சி உதயநகர் மேற்கைச்சேர்ந்த 23 வயதுடைய வரதராஜா ஜெமினன் மற்றும் யாழ்ப்பாணம் செட்டியார் மடம் அராலி மேற்கைச்சேர்ந்த 29வயதுடைய செல்வநாயகம் அஜிந்தன் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பாரஊர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7