![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAk1OQH7ZFKHVzDFbQ0zY8ZdPlNSkNmK4kNTKhlTK9YR42wDg70EyqTlka9ij_xkdabF3s-v6fM7lysxsReZ8UxWQ29HOVXhRChB2FjTjIh92aydzjrOM_LTXctiV5c6XYqGPmIvdOejU/s320/thattungal.com.jpg)
கௌரவமான முறையில் புதிய தலைமுறைக்கு தமது பொறுப்புக்களை ஒப்படைத்து அவரின் ஜனநாயக கடமையை நிறைவு செய்வார் என எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ.பெரேரா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், தமக்கு கிடைத்துள்ள தகவலின்படி ரணில் விக்ரமசிங்க தனது பொறுப்புக்களை நிறைவு செய்து பதவி விலக தயாராக உள்ளதாக அறியக்கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகுமாறு கட்சி உறுப்பினர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)