
வரைபுக்கு பதிலடி அளிக்கும் வகையில் ஹொங்கொங்க் கடற்பரப்பில் அமெரிக்க கடற்படை பயணிப்பதற்கு சீனா தடை விதித்துள்ளது.
சீனா மீதான அமெரிக்காவின் காரணமில்லாத சமீபத்திய நடவடிக்கைக்கு எதிராகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹூவா சுங்யிங் (Hua Chunying) தெரிவித்துள்ளார்.
மேலும் ஹொங்கொங்கில் நடந்த போராட்டங்களை கண்காணித்து அறிக்கை அளித்து வரும் அமெரிக்க அரச சார்பற்ற மனித உரிமை அமைப்புகளுக்கும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்றும் சீனா தெரிவித்துள்ளது.
ஹொங்கொங்கில் நடைபெற்றுவரும் போராட்டம் தொடர்பாக எந்த நாடும் தலையிட வேண்டாம் என சீனா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தது. இதனிடையே அமெரிக்கா, ஹொங்கொங் விவகாரத்தில் போராட்டக்காரர்களுக்கான ஆதரவு நிலைப்பாட்டைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஹொங்கொங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவான சட்ட வரைபு ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட அந்த சட்ட வரைபில் ஹொங்கொங் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய அந்நாட்டு பொலிஸாருக்கு கண்ணீர் புகைக் குண்டுகள், இறப்பர் குண்டுகள், பெப்பர் ஸ்பிறே ஆகியவற்றை ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்தச் செயலை உள் நோக்கம் கொண்டது என சீனா முன்னரே விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
