![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzXKGb7NJuI4tTUBVTW7zZ15EbCEON8BP4aT5ZPys2bSn0g8jH18TfPe5KEvIdgkerYQQ_UKMbkpRaZ3sUTuZLtPWxlbdLPcSq1NAKwkXMm2HxpeilFzzoBH8x5CK1GC0Z3YMT3uKhgjU/s320/thattungal.com.jpg)
மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியா – தேக்கவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்களிடமிருந்து 1010 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 20, 30, 38 வயதுடைய இளைஞர்கள் மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)