LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, December 2, 2019

யாழின் புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் மக்களுக்கு அழைப்பு!

வடக்கில் சட்டத்தையும் ஒழுங்கையும் நடைமுறைப்படுத்துவதற்கு
மக்களை பொலிஸாருடன் இணைந்து செயற்பட வருமாறு புதிதாக பதவியேற்றுள்ள யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் சேனாரத்ன அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் மகேஷ் சேனாரத்ன தனது கடமைகளை இன்று (திங்கட்கிழமை) முற்பகல் 11.15 மணியளவில் பொறுப்பேற்றார்.

இவர், பொலிஸ் தலைமையகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆய்வு மையத்தின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றினார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த ராஜித, பிரதமரின் பாதுகாப்புப் பிரிவுக்கு மாற்றம்பெற்று சென்றமை குறிப்பிடத்தக்கது.

பதவியை பொறுப்பேற்ற பின்னர் மகேஷ் சேனாரத்ன ஊடகங்களில் தெரிவிக்கையில், “வடக்கில் இன்றைய தினம் பிரதிப் பொலிஸ்மா அதிபராக எனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளேன் வடக்கில் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்த என்னாலான முயற்சிகளை முன்னெடுக்க உள்ளேன். அத்தோடு பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்துவதற்கு நான் முழுமையாக முயற்சிப்பேன்.

அத்தோடு வடக்கில் பணியாற்றும் பொலிஸாருக்கு உள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் நான் பூரணமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பேன். எனினும் பொது மக்களுக்கு நான் ஒரு அழைப்பு விடுக்கின்றேன். சட்டத்தையும் ஒழுங்கையும் நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7