LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, December 10, 2019

என்கவுண்டர் செய்த பொலிஸார் மீது வழக்குப் பதிவு – மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி

தெலங்கானாவில் பெண் மருத்துவரை
பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற 4 பேர், என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் வழிமுறைகள் பின்பற்றவில்லை எனக்கூறி வழக்கறிஞர்கள் ஜி.எஸ்.மணி மற்றும் பிரதீப் குமார் ஆகியோர் சில தினம் முன்பு மனுத்தாக்கல் செய்தனர்.

என்கவுன்டர் செய்த காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் அதில் அவர் கோரியிருந்தனர். மேலும் சிறப்புக் குழுவின் விசாரணையை கண்காணிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, இந்த மனு மீதான விசாரணை நாளை மறுதினம் நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 27ஆம் திகதி தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையின் அடிப்படையில் அவர்கள் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.

இச்சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு 4 பேரையும் கடந்த 6 ஆம் திகதி அழைத்துச் சென்று, எப்படி கொலை செய்தனர் என பொலிஸார் செய்து காட்டச் சொன்னார்கள். அப்போது 4 பேரும் தப்பித்து ஓட முயன்றதால் 4 பேரையும் பொலிஸாஎன்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7