LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, December 5, 2019

நிர்பயா நிதி குறித்து ஸ்டாலின் அறிக்கை!

நிர்பயா நிதியில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட 190 கோடி
  ரூபாயில் 6 கோடி ரூபாயை மட்டுமே அ.தி.மு.க அரசாங்கம் செலவு செய்துள்ளதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு தடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்‌.

தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடந்து வரும் குற்றங்கள் மூலம் அனைவரும் அச்சமடைந்துள்ளதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

பெண் ஒருவர் சுதந்திரமாக‌ நள்ளிரவில் நடமாடும் நிலையே உண்மையான சுதந்திரம் என மகாத்மா காந்தி கண்ட கனவு தற்போது பட்டப் பகலில் கூட சாத்தியமில்லாத சூழல் இருப்பதாகவும் அவ‌ர் தெரிவித்துள்ளார்.

நிர்பயா நிதியின் கீழ் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய 190 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையிலும்இ அதிலிருந்து வெறும் 6 கோடி ரூபாயை மட்டுமே அ.தி.மு.க அரசு செலவழித்துள்ளதாக ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7