![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiDFdxOPQGvfyz-z1xa0r61VmtYnSsOqxZep9mkKqzgkhgryj9JzW0ovFHXERxlcfPT2Wih-9S-tOwJ8Fh2Qt4kHkSQPRMFKoE7FbUr-LyZZ-PvH3gq6Wb80EqFVyBFHo1gDePYNeSYEvI/s320/thaattungal.com.jpg)
விமானம் கனடாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
அதில் பயணித்த 2 வயது குழந்தை உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட நிலையில் விமானம் தரையிறக்கப்பட்டது. எனினும் குழந்தை உயிரிழந்துள்ளது.
சவுதியின் ஜெட்டாவில் இருந்து நேற்று (செவ்வாய்கிழமை) உள்ளூர் நேரப்படி காலை 6.30 க்கு பயணிகள் விமானம் வோஷிங்ரனை நோக்கிப் பயணித்தது.
இந்நிலையில் விமானத்தில் இருந்த குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால் விமானமானது கனடாவின் நியூபௌண்ட்லான்ட் (Newfoundland) மாகாணத்தில் உள்ள சென்ற் ஜோன் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து குழந்தை உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
குழந்தை எதனால் உயிரிழந்தது என்ற காரணம் இன்னும் தெரிவிக்கப்படாத நிலையில் அதன் இறப்பில் சந்தேகத்துக்குரிய விடயங்கள் இல்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இருந்த போதிலும் குழந்தையின் பெற்றோர் மற்றும் மேலதிக விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. கனடாவில் தரையிறக்கப்பட்ட விமானம் பின்னர் வோஷிங்கரனுக்கு பயணத்தை தொடர்ந்தது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)