LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, November 8, 2019

ஒரு மாதத்தில் தேர்தல் விதி மீறல் முறைப்பாடுகள் மாத்திரம் ஆயிரக்கணக்கில் – தேர்தல் ஆணைக்குழு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஒரு
மாதத்தில் 3,214 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதிகளவிலான முறைப்பாடுகள் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பாகவே பதிவாகியுள்ளதுடன், அவ்வாறான முறைப்பாடுகள் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கே அதிகம் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நேற்று (வியாழக்கிழமை) மாலை 4 மணிவரையான 24 மணித்தியாலத்திற்குள் தேர்தல் தொடர்பாக 131 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 97 முறைப்பாடுகளும், தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 34 முறைப்பாடுகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இதன்போது சட்ட மீறல்கள் தொடர்பாக 128 முறைப்பாடுகளும், மூன்று முறைப்பாடுகள் தேர்தல் தொடர்பான ஏனைய குற்றச் செயல்கள் தொடர்பாகவும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கடந்த 8ஆம் திகதி முதல் இன்று வரையான 31 நாட்களுக்குள் 3,214 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 2,250 முறைப்பாடுகளும், தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 964 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

இதன்படி, தேர்தல் சட்ட திட்டங்களை மீறியதாக 3,087 முறைப்பாடுகளும், தேர்தல் தொடர்பான ஏனைய குற்றச் செயல்கள் தொடர்பாக 102 முறைப்பாடுகளும், தேர்தல் வன்முறைகள் தொடர்பாக 25 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளதாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7