LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, November 6, 2019

சர்ச்சைக்குரிய வழக்கின் தீர்ப்பு – அயோத்தியில் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை

உத்தரபிரதேச மாநிலம்
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளது.

இந்த தீர்ப்பு பிறப்பிக்கப்பட்ட பின்னர் அசம்பாவிதம் ஏற்படக்கூடாது என்பதற்காக அந்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அயோத்தி மாவட்ட ஆட்சியர் அனுஜ்குமார் ஜா இதுதொடர்பாக ஏற்கனவே கடந்த ஒக்டோபர் 12 ஆம் திகதி பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தார். அவை டிசம்பர் 10 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்றும் கூறியிருந்தார்.

இப்போது அந்த உத்தரவுகள் அனைத்தும் டிசம்பர் 28 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ள உத்தரவில், பொது இடங்களிலோ, தனியார் இடங்களிலோ மக்கள் ஒன்றுகூடுவது சமூக நல்லிணக்கத்துக்கு ஊறுவிளைவிக்கும் என்பதால் அவை தடை செய்யப்படுகிறது. அயோத்தி தீர்ப்புக்காக வெற்றி கொண்டாட்டங்களோ, ஊர்வலங்களோ அல்லது மௌன, துக்க ஊர்வலங்களோ நடத்தக்கூடாது.

ராமஜென்ம பூமி தொடர்பாக எந்த நிகழ்ச்சிகளோ, பொது விழாக்களோ, ஊர்வலங்களோ, சுவர் விளம்பரங்களோ செய்யக் கூடாது. தெருமுனை கூட்டங்கள், கலாசார நிகழ்ச்சிகள் ஆகியவைகளை நடத்தக்கூடாது – எனக் கூறப்பட்டுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7