LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, November 13, 2019

மீண்டும் டெல்லியில் காற்று மாசு அதி தீவிரமாக மாறும் அபாயம்!

டெல்லியில் கடுமையான காற்று மாசு
ஏற்படும் அபாயம் உள்ளதால் இன்று (புதன்கிழமை) அவசரநிலை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 10 நாட்களாக தலைநகர் டெல்லியில் கடுமையான காற்று மாசு ஏற்பட்டு அங்கு புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் மூச்சு திணறல் பிரச்சினையால், பாடசாலை செல்லும் சிறியவர்கள் முதல் பெரியவர் வரை பலர் முக கவசம் அணிந்தபடி அன்றாட பணிகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் காற்று மாசு 425 புள்ளிகளாக இருந்தது. எனினும் இரவு 9 மணியளவில் 437 அதிகரித்து, இரவு 10 மணியளவில் 484 புள்ளிகளை தொட்டது. இது 500 புள்ளிகளை தாண்டி இன்று அதி தீவிரமாக மாறும் என கூறப்படுகிறது.

காற்று மாசின் தரக்குறியீடு, 0 – 50 புள்ளிகள் வரை இருந்தால் மட்டுமே அது சுவாசிக்க ஏற்றதாகக் கருதப்படும். அது, 201 – 400 புள்ளிகள் வரை இருந்தால் மிக மோசமான நிலை என்றும், 500 புள்ளிகளை தாண்டினால் அதிதீவிர அபாய நிலை என்றும் கூறப்பட்டது.

கடந்த 2ஆம் திகதியன்று டெல்லியின் காற்று மாசின் தரக்குறீயீடு அளவு, 533 புள்ளிகள் என்ற அதிதீவிர அபாய கட்டத்தை தொட்டது.

அதன்பினனர் 480 புள்ளிகளாக குறைந்தது. இதனால், டெல்லியில் பொது சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7