![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhV-Ww1KmnKgIGUUiqMiYx0moRyiClBOxEmDs7mN5yT5kO8Oo_Kdw81dutGeCnq2G1N2FD1xOfepLYTH7nCd7E7XsCKOYTa9e20yIoYejtt7mCiFumEATper1qutrvOaRT4p_-coQoZCB4/s320/%25E0%25AE%25AA%25E0%25AF%258A%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D-720x450.jpg)
தீவிரமடைந்து வரும் நிலையில் அதற்குரிய நிர்வாகத் தலைவர் கேரிலாம் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
சீனாவின் எல்லைக்குட்பட்ட தன்னாட்சி உரிமம் கொண்ட ஹொங்கொங்கில் குற்றவியல் வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களை சீனாவுக்கு நாடுகடத்தி, வழக்கு விசாரணையை எதிர்கொள்ள ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹொங்கொங் நிர்வாகம் தீர்மானித்தது.
குறித்த திருத்த சட்டமூலத்தை முழுமையாக ரத்துச்செய்ய வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என வலியுறுத்தி சுமார் 6 மாதங்களாக அங்குள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆரம்பத்தில் வார இறுதியில் மாத்திரமே நடத்தப்பட்ட போராட்டங்கள், வார நாட்களிலும் நடைபெற்று வருகின்றன. இதன் விளைவாக போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே மோதல் வலுத்து வருகின்றது.
இந்தநிலையில், ஹொங்கொங் தலைமை நிர்வாகி கேரி லாம்மை சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்றுவரும் இறக்குமதி-ஏற்றுமதி பொருட்காட்சியின் போது சீன ஜனாதிபதியை சந்தித்த கேரி லாம் ஹொங்கொங்கில் தற்போது நிலவி வரும் சூழல் தொடர்பாக விளக்கமளித்தார்.
ஹொங்கொங்கில் அமைதி ஏற்படவும் இயல்புநிலை திரும்பவும் கேரி லாம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவும் பாராட்டும் தெரிவித்த ஷீ ஜின்பிங் அவரது திறமையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)