LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, November 3, 2019

பயங்கரவாதத்தை ஒடுக்க ஷாங்காய் உறுப்பு நாடுகள் ஒன்றிணைய வேண்டும் – ராஜ்நாத் சிங்

பயங்கரவாதத்தை ஒருங்கிணைந்து ஒடுக்க
வேண்டும் என பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் உறுப்பு நாடுகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் இன்று (சனிக்கிழமை) ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்படி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், பயங்கரவாத தாக்குதலால் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. பயங்கரவாதம் சமூகங்களை தொடர்ந்து சீர்குலைக்கிறது. எனவே, எந்தவித இரட்டை கருத்துகளும் இன்றி, நமது வளர்ச்சியை மறைமுகமாக பாதிக்கும் பயங்கரவாதத்தை ஒருங்கிணைந்து ஒடுக்க வேண்டும்.

தற்போதுள்ள அனைத்து சர்வதேச சட்டங்களையும் வழிமுறைகளையும் வலுப்படுத்தி செயல்படுத்த வேண்டும். பயங்கரவாத அச்சுறுத்தலை சமாளிக்க ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நாடுகள் ஒன்றிணைவது முக்கியம்.

நட்பு நாடுகள் எளிதில் தொழில் தொடங்குவதற்கும் முதலீடு செய்வதற்கும் ஏற்ற சுமூகமான பொருளாதார சூழலை இந்தியா வழங்குவதற்கு தயாராக உள்ளது.

இந்தியா தனது லட்சிய திட்டமான மேக் இன் இந்தியா திட்டத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவில் உள்ள கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன எனத் தெரிவித்தார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7