LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, November 12, 2019

நான் ஆட்சியில் இருந்த காலத்தில் பிரபாகரனுக்கு 42 கடிதங்கள் எழுதியிருந்தேன் : சந்திரிகா

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் விடுதலை
புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 42 கடிதங்கள் எழுதியதாக சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் – வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதியாக ஆட்சிக்கு வந்து பத்து நாட்களிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சேருக்கு கடிதம் எழுதியிருந்தேன். மேலும் அவர்களுக்கு நான் ஆட்சியில் இருந்த காலத்தில் 42 கடிதங்கள் எழுதியிருந்தேன்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சேருடன் சமாதான சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தேன்.

மேலும் எமது நாட்டில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டிருந்த போது கூட நாம் அவர்களுடன் இணைந்து மக்களை மீட்டு அத்தியாவசிய உதவிகளை வழங்கியிருந்தேன்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சேருடன் சமாதான முயற்சிகளை மேற்கொண்ட போதும் அவர் தாம்தான் வடக்கின் அரசன் தமிழீழத்தை அடைந்தே தீருவேன் என கூறினார்.

அதனாலேயே நாம் இறுதியில் போரை ஆரபிக்க வேண்டியிருந்தது” என சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7