![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtuSaaQl9JxoV5SNHzIifbhyphenhyphen24clRG8bQvlrSYj6W7g27luWFHS7hiNEpkyw9_O1TXGPF__koRUA1sqFQ_PBslj3U0CRxHepkQPDEjJM__IPE_6NDTYJ0d_Tn7_B7kcsAJWXl4ra6C-1E/s640/109320457_70b03c1c-7754-4ea0-8cba-de57c1cfa5ba-720x446.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwaJv3g2J8M1Qa8eHD96dPkG_vkwbS5Z7r5lcLsdNSx2KN8694gQ1Gau8uyQf405B2uOWPuNBT8XrIQMYXKUe9lQvsDzwXls-2jhHtPiZDIDFgqHfYLQJSgqtQ9W3cTeABC5gRItqQxdw/s400/109320456_1af13fd8-d384-4535-bf23-b259d62bd0ba.jpg)
பெண் தளபதியான சின்னிநாட் வாங்வாச்சீர்னாபாக் பேராசையோடு செயல்பட்டதாகவும், அரசிக்கு இணையான நிலைக்கு தன்னை உயர்த்திக்கொள்ள முயன்றதாகவும் தாய்லாந்து அரசவை வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கடந்த ஜூலை மாதம் மன்னர் வஜ்ரலாங்கோர்ன், சுதிடா என்ற பெண்ணை திருமணம் புரிந்து அவரை அரசியாக்கினார். இவர் அரசரின் நான்காவது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருமணம் இடம்பெற்ற இரண்டாவது மாதத்தில் சின்னிநாட்டிற்கு அரச தகுதி வழங்கப்பட்டது.
தாய்லாந்து ராணுவத்தில் ஒரு தளபதியாகவும் பணியாற்றிய சின்னிநாட் வாங்வாச்சீர்னாபாக், விமானியாகவும், தாதியாகவும், மன்னரின் மெய்காப்பாளராகவும் செயற்பட்டுள்ளார்.
கடந்த 100 ஆண்டுகளில், தாய்லாந்து அரச அதிகார குழுவில் இந்தத் தகுதியைப் பெற்றுள்ள முதல் பெண் சின்னிநாட் வாங்வாச்சீர்னாபாக் என்பது குறிப்பிடத்தக்கது.
.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)