LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, October 22, 2019

மகாராணியாக முயற்சிக்கும் பெண் தளபதி – அரச தகுதியை நீக்கிய தாய்லாந்து மன்னர்!

தாய்லாந்தில் மன்னருக்கு எதிராகவும், அரச நம்பிக்கைக்கு எதிராகவும் செயல்பட்டதாக குற்றம்சுமத்தப்பட்ட தாய்லாந்தின் அரசப் படையைச் சேர்ந்த பெண் தளபதி ஒருவரின் அதிகாரத்தை அந்த நாட்டு மன்னர் மகா வஜ்ரலாங்கோர்ன் பறித்துள்ளார்.

சின்னிநாட் வாங்வாச்சீர்னாபாக் என்ற குறித்த பெண் தளபதிக்கு வழங்கப்பட்டிருந்த அரச தகுதியை தாய்லாந்து மன்னர் நீக்கியுள்ளார்.

பெண் தளபதியான சின்னிநாட் வாங்வாச்சீர்னாபாக் பேராசையோடு செயல்பட்டதாகவும், அரசிக்கு இணையான நிலைக்கு தன்னை உயர்த்திக்கொள்ள முயன்றதாகவும் தாய்லாந்து அரசவை வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கடந்த ஜூலை மாதம் மன்னர் வஜ்ரலாங்கோர்ன், சுதிடா என்ற பெண்ணை திருமணம் புரிந்து அவரை அரசியாக்கினார். இவர் அரசரின் நான்காவது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருமணம் இடம்பெற்ற இரண்டாவது மாதத்தில் சின்னிநாட்டிற்கு அரச தகுதி வழங்கப்பட்டது.

தாய்லாந்து ராணுவத்தில் ஒரு தளபதியாகவும் பணியாற்றிய சின்னிநாட் வாங்வாச்சீர்னாபாக், விமானியாகவும், தாதியாகவும், மன்னரின் மெய்காப்பாளராகவும் செயற்பட்டுள்ளார்.

கடந்த 100 ஆண்டுகளில், தாய்லாந்து அரச அதிகார குழுவில் இந்தத் தகுதியைப் பெற்றுள்ள முதல் பெண் சின்னிநாட் வாங்வாச்சீர்னாபாக் என்பது குறிப்பிடத்தக்கது.


.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7