LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, October 19, 2019

ஜனநாயக அரசியல் செய்யும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பெறுவதில் எந்த பிரச்சினையும் இல்லை – தலதா

ஜனநாயக முறையில் அரசியல் செய்யும்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை ஐக்கிய தேசியக் கட்சி  பெற்றுக்கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

அத்துடன், நூற்றுக்கணக்கான பிக்குமார்களை கொலைசெய்த கருணா அம்மானின் ஆதரவை மஹிந்த ராஜபக்ஷ பெறும் போது இது பிரச்சினையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரத்தினபுரியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக முறையில் செயற்படும் அரசியல் கட்சியாகும். ஜனாதிபதி தேர்தலில் அவர்களின் ஆதரவு யாருக்கு என்பதை அந்த கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தன் அறிவிக்காதவரை எங்களுக்கு எதுவும் தெரிவிக்க முடியாது.

அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்தால் அதனை வரவேற்று ஏற்றுக்கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை.

மேலும், பலாலி விமான நிலைய பெயர்ப்பலகையில் தமிழ் மொழிக்கு கீழ் சிங்கள மொழி பொறிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அதனை பாரிய பிரச்சினைபோல்  காட்ட சிலர் முயற்சிக்கின்றனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7