![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiq58TpeiPnpGkBWbcvtL93UmrSLwoFKhj151At782CMViRvuTB-pOCe4HwMECI5_sbCp810kzzLBNhtuyy7PsBRpQtEm9ZNzwMoGddPaXlwXrz-T4lshvdhM5yYpuNKjgT435V-4ahpu4/s320/stabing-attack-1-1-720x450.jpg)
பெண்ணும், கத்தியால் குத்திய நபரும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனினும், சந்தேக நபர் குறித்த விபரங்கள் எதனையும் வெளியிடாத பொலிஸார், இதுகுறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கிங்ஸ்டன் வீதி மற்றும் கெலோவே வீதிப் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
இதில் காயமடைந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)