LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, October 26, 2019

ஜனாதிபதி தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் 60 ஆயிரம் பொலிஸார் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் விதிகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் இது தொடர்பாக தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “இதுவரையில் தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பாக 30 முறைப்பாடுகள் எங்களுக்கு கிடைத்துள்ளன. இச்சம்பவங்களுடன் தொடர்புபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வன்முறை செயற்பாடுகள் மற்றும் தேர்தல் விதிகளை மீறும் சம்பவங்கள் குறைவாகக் காணப்படுகின்றன.

விதி முறைகளை கடைப்பிடிப்பதிலும் முன்னேற்றம் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அமைதியையும், சட்டத்தையும் நிலை நிறுத்துவதிலும் பொலிஸார் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.

ஜனாதிபதி தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் 60 ஆயிரம் பொலிஸாரை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக இதனுடன் தொடர்புபட்ட அதிகாரிகள் நான்காயிரம் பேரை மேலதிக கடமைகளில் ஈடுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது” என அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7