(ஜெ.ஜெய்ஷிகன்)
NOW WOW Charity புதிய சந்தர்ப்பங்கள் அமைப்பு, கல்குடா வலயக்கல்விப் பணிமனையுடன் இணைந்து நடாத்தும் 'கணிதமுகாம் 2019 இன்று மட்/ககு/ சந்திவெளி சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் திரு.A.T.அமலதாஸ் உதவிக் கல்விப்பணிப்பாளர் தலைமையில் ஆரம்மமாகியது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLefNVm5aTdOf3Nt81YyQjNwbbbz5PukLdP0zJtsGjAJzsnVkeHSNntNWKOY6WC3lMpqSg62v2VBhQtc_PR3UCakA6HAVUBpTAzKyAY6okhc1r8_u2nPD5XKgbY71KbI3P5eY-FGlPxDs/s200/thattungal+%25281%2529.jpg)
இதில் கோறளைப்பற்று கோட்ட 16 பாடசாலைகளைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் பங்குபற்றியதுடன் இம் முகாமானது தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறுகிறது. தேர்ச்சிபெற்ற வளவாளர்களின் வழிகாட்டலில் எதிர்வரும் க.பொ.தசா/தரப்பரீட்சையில் கணிதபாடத்தின் சித்தி வீதத்தை அதிகரிக்கும் நோக்கோடு திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்படும் இந் நிகழ்வில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றதுடன் அமைப்பின் வடமாகாண இணைப்பாளர் கு.குணராஜ்,பங்கேற்றுஅனைவரையும் ஊக்கப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)