LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, August 16, 2019

மட்டக்களப்பு வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டு வந்த பகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்தது

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்
முன்னெடுக்கப்பட்டுவந்த பணிப் பகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்ததுடன் வைத்தியசாலை நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பியன.

வைத்தியசாலையின் கழிவுகளைப் புதைப்பதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கிய நிலையில் பணிப் பகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்துள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேகரிக்கப்பட்ட கழிவுகளை நேற்று முன்தினம் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேப்பவெட்டுவானில் புதைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அப்பகுதி மக்களினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு திராய்மடு பகுதியில் உள்ள வைத்தியசாலை கழிவுகளை எரிக்கும் நிலையத்தில் கழிவுகள் கொண்ட வாகனத்தினை நிறுத்த முற்பட்டபோதிலும் அங்கும் மக்களின் எதிர்ப்பு காரணமாக வாகனங்களை நிறுத்திவைக்க முடியாத நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக ஆறு வாகனங்களும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் வைத்தியசாலையில் வைத்திய கழிவுகள் அகற்றப்படும் வரையில் பணிகளை மேற்கொள்ள மாட்டோம் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு தவிர்ந்த ஏனைய அனைத்து பிரிவினரும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதேநேரம் வாகனங்களில் உள்ள வைத்தியசாலைக் கழிவுகளை வேப்பவெட்டுவானில் புதைப்பதற்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதுடன் அவற்றினை உலக சுகாதார நிறுவனத்தின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக புதைக்கவேண்டும் எனவும் பணிப்புரை விடுத்துள்ளது.

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் கருப்பையா ஜீவராணி, வேப்பவெட்டுவான் மற்றும் திராய்மடுக்கு சென்று அப்பகுதியின் நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்ததைத் தொடர்ந்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் புதைக்கப்பட்டதன் பின்னர் மாதாந்தம் குறித்த பகுதியை கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பணிக்கப்பட்டுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7