LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, August 5, 2019

பிலிப்பைன்ஸிஸ் படகுகள் கவிழ்ந்து 31 பேர் உயிரிழப்பு – எச்சரிக்கையை மீறியதால் ஏற்பட்ட விபரீதம்

பிலிப்பைன்ஸில் கடல் பயணத்தின்போது சூறாவளி காற்றுடன் பெய்த கடும் மழையில் சிக்கிய இரு படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

குய்மாரஸ் மற்றும் ஈவோய்லோ மாகாணங்களுக்கு இடையில் கடல் வழியாக பயணிகளை ஏற்றிச்சென்ற இரு படகுகள் நேற்று (சனிக்கிழமை) மாலை சூறைக்காற்றுடன் அடித்த கனமழையில் சிக்கி அடுத்தடுத்து கவிழ்ந்தன.

இதையடுத்து, கடலோரக் காவல் படையினர் 62 பயணிகளை பத்திரமாக மீட்டதுடன், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த 31 சடலங்களையும் கண்டெடுத்தனர்.

நிலநடுக்கங்களால் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டும் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 20 முறை கடற்புயல் மற்றும் பலத்த சூறாவளி காற்றுடன் பெருமழையும் பெய்வது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், அந்நாட்டின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்யவுள்ளதாகவும், கடலில் பயணங்கள் மற்றும் மீன்பிடியில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம் எச்சரித்திருந்தது.

ஆனால், இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் கடற்பயணம் மேற்கொண்டதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7