LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, July 29, 2019

ஏவுகணை சோதனை நடத்தப்படும்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!

தேவை ஏற்பட்டால் ஏவுகணை சோதனை நடத்தப்படும் என ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது.

இவ்வாறு சோதனை நடத்துவதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை என அமெரிக்காவுக்கு ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரான் இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இது குறித்து தெரிவிக்கையில், “ஈரானின் ஏவுகணை என்பது முற்றிலும் தற்காப்புக்கானது. வேறு எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல. எனவே தேவை ஏற்படுமாயின் ஈரான் நிச்சயமாக ஏவுகணையை சோதிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏவுகணை சோதனையின் நோக்கம் ஈரானின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான ஆக்கிரமிப்புக்கு பதிலளிப்பதே ஆகும். அத்தோடு ஈரான் தன்னை தற்காத்துக்கொள்ள எதை வேண்டுமானாலும் செய்யும். அதற்கு உலகில் எந்த சக்தியின் அனுமதியும் தேவையில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

அணுவாயுத பரவலைத் தடுக்கும் விதமாக ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த ஆண்டு மே மாதம் விலகியது.

இதனால் அதிருப்தியடைந்த ஈரான் அந்த ஒப்பந்தத்தின் விதிகளை மீறி அணுவாயுதங்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை அதிகப்படுத்தியது. இதனால் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து காணப்படுகிறது.

கடந்த வாரம் ஈரான் நடுத்தர ஏவுகணை ஒன்றை ஏவி சோதனை நடத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஆனால் இதுகுறித்து ஈரான் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையிலேயே அமெரிக்காவிற்கு சவால் விடுக்கும் வகையில் தேவை ஏற்பட்டால் ஏவுகணை சோதனை நடத்தப்படும் என்றும், அதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7